ஏடிஎம் கார்டு என்பது நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் இந்த ஏடிஎம் கார்டு மூலமாக அடிக்கடி மோசடிகளும் நடந்து வருகிறது . எனவே ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அந்த பணத்தை எளிதாக ஏடிஎம் கார்டு மூலமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் ATM அட்டையை பயன்படுத்தாமலேயே இயந்திரத்தில் பணம் எடுக்கும் வசதி இருக்கிறது. அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ATM மையத்திற்கு சென்று இயந்திரத்தில், UPI  பணம் எடுக்கும் முறையை தேர்வு செய்ய வேண்டும். அப்போது வரும் QR code-ஐ உங்களது போனில் உள்ள BHIM, Paytm, G Pay, PhonePe போன்ற UPI செயலிக்குள் உள்ளே நுழைந்து ஸ்கேன் செய்து, தேவைப்படும் பணம், கடவுச்சொல்லை பதிவிட்டு OK கொடுத்தால் பணத்தை எடுக்க முடியும்.