பெண்களிடம் ஆண்களைக் கவர்ந்து இழுக்கும் முதல் உறுப்பாக இருப்பது அவர்களின் மார்பகங்கள் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.பெண்களுக்கு மார்பகம் பெரிதாக இருந்தால் தான் ஆண்கள் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். செக்ஸ் ஆசையை ஆண்களுக்கு தூண்டிவிடுவதை விட , வேறு எந்த வேலையையும் பெரிய மார்பகங்கள் செய்வதில்லை. மார்பகங்கள் சிறிய அளவாக இருக்கும் ஒரு சில பெண்கள் அதனை ஒரு பெரும் குறையாக நினைத்து, உடலுறவின் போது ஆண்களை முழுமையாகத் திருப்திபடுத்த முடியாது என்று கவலையடைந்து ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இந்த தாழ்வு மனப்பான்மை மற்றும் உடலமைப்பு குறித்த தவறான எண்ணங்கள் கிராமத்துப் பெண்களிடம் மட்டும் தோன்றவில்லை, நகரத்துப் பெண்களிடமும் தோன்றுகிறது. அதாவது, நமது உடல் பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் ஏதாவது நினைக்கிறார்களா? என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து இந்த எண்ணத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது.
முக்கியமாக, உடலுறவில் ஆணை நன்கு திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரியதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. உண்மையைச் சொன்னால் பெண்களின் மார்பகங்களுக்கும், அது சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருப்பதற்கும், செக்ஸ் அல்லது குழந்தைக்குப் பாலூட்டுவதற்கோ எந்தவித சம்பந்தமும் இல்லை. ஓர் ஆண், பெண்ணின் மீது எந்த அளவிற்கு அன்பு , ஆசை, காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம்.
ஆனால் பல சினிமா நடிகைகள், அறுவைச் சிகிச்சை செய்து தங்களது மார்பகங்களைப் பெரிதாக்கிக்கொள்கிறார்களே ? என்று அனைவரின் மனதிலும் கேள்வி எழலாம். நடிகைகள் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை இழுக்க வேண்டிய கட்டாயம் மற்றும் சினிமாவின் காட்சித் தேவைகளுக்காகவும் அப்படி இருக்கவேண்டியதாக இருக்கிறது.
அதே போலவே ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று கட்டாயமோ, அவசியமோ இல்லை.பொதுவாக, இதுபோன்ற காரணங்களால் தான் தாழ்வு மனப்பான்மை ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, இருவருக்கும் அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலையில்தான் ஏற்படுகிறது. ஆகவே , தன் உடல் அமைப்பு இன்பமயமானது என்றும், இதனை வைத்து ஆண்களுக்குத் தேவையான முழு இன்பம் தரவும், பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பதில் பெண்கள் மன உறுதியோடு இருக்க வேண்டியது அவசியமாகும்.