தமிழகத்தில் அரசு கலை , அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன . இந்த காலி பணி இடங்களுக்கு ஆண்டுதோறும் பதினோரு மாதங்களுக்கு மட்டும் தொகுப்பூதியத்தில் உதவி பேராசிரியர் பணி அமர்த்தப்படுகின்றனர் . 11 மாதங்களுக்கு பின் நியமனம் மீண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது .
