கல்வி உதவி தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்குமாறு மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் 2021-2022 ஆம் கல்வியாண்டு பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதி திராவிடர் மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவி பெற விண்ணப்பிப்பதற்கான இணையதளம் கடந்த 6-ம் தேதி திறக்கப்பட்டது. இதன் இறுதி நாள் 10. 02. 22 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே தகுதியுள்ள மாணவர்கள் தங்களது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து ஜாதி சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்பு கணக்கு புத்தகங்கள், ஆதார் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் அடுத்த மாதம் 10-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.