மது போதையில் டாஸ்மார்க் முன்பு விழுந்து கிடந்த நபரை பெண் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை மில்கேட் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. தற்போது பார்கள் இல்லாத காரணத்தினால் மது பிரியர்கள் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்தி விட்டு செல்கின்றனர். இந்நிலையில் 45 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் மது குடித்துவிட்டு போதையில் நடக்க முடியாமல் டாஸ்மார்க் கடை முன்பு விழுந்து உளர ஆரம்பித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அந்த நபரின் உறவினர் பெண் அவரை எழுப்ப பல்வேறு வழிகளில் முயன்றும் முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த அந்த பெண் தொழிலாளியை சரமாரியாக தாக்கி எழுப்ப முயற்சி செய்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்து சென்றனர்.