தாய் மது போதையில் மயங்கி கிடந்ததால் 2 வயது குழந்தை கதறி அழுது துடித்துள்ளது.
புதுச்சேரியிலுள்ள பாரதிதாசன் வீதி அமைந்துள்ளது. இங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மது போதையில் மயங்கி கிடந்துள்ளார். அப்பெண்ணின் 2 வயது குழந்தை செய்வதறியாது தாயின் அருகில் அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குழந்தை நல குழுவிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குழந்தை நல்ல குழுவினர் அழுது துடித்துக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு உணவு கொடுத்துள்ளனர். இதனையடுத்து குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போதையிலிருந்த பெண்ணை மீட்டு குடிப்பழக்கத்தில் இருந்து திருந்த அறிவுரை கூறியுள்ளனர்.