குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள பசுபதிபாளையம் பகுதியில் சண்முகம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கலையரசி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள சண்முகம் தனது மனைவியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு கலையரசி பணமில்லை என்று கூறி தர மறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சண்முகம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இது குறித்து தகவலறிந்த தாந்தோணிமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்