அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை… விண்ணப்பங்கள் வரவேற்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கு வருகிற 31-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக அகவை முதிர்ந்த தமிழர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் வருடம் தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 1.1.2022 நாள் அன்று 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.

மேலும் ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ் பணி ஆட்சிமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப் பணியாற்றியதற்கான தகுதி நிலை சான்று தமிழ் அறிஞர்கள் இரண்டு பேருடன் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவரது வாழ்நாள் முழுவதும் ரூ.3500 உதவித்தொகை மற்றும் மருத்துவ படி ரூ.500  மாதம் தோறும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற 31.3.2023 -க்குள் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும். மேலும் நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply