அதிமுகவில் நடைபெற்று வரும் உட்கட்சி பூசலால் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இடையேயான சட்ட போராட்டம் தொடர்ந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொது செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 24ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் முன்வைக்கப்பட்டது. முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது அத்துமீறி நடந்துள்ளனர். திமுகவுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி என்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர். அதனை தொடர்ந்து அதிமுகவின் நிபந்தனைகளை நீக்கினால் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என ஓபிஎஸ் தரப்பு வாதித்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நீதிமன்றத்தில் உங்களின் நிலைப்பாடு மாறி இருக்கிறதே அதற்கு யார் சொன்னது நாங்கள் ஒன்றுமே சொல்லவில்லை. ஓபிஎஸ் தான் அப்படி பேசி இருப்பதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் கழகம் வெற்றி பெறும் சாதாரண தொண்டன் கூட கழகத்தின் உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் அவர்கள் விதியை மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். தற்போது 10 மாவட்ட செயலாளர் வழிமொழிய வேண்டும் என்று சட்டத்தை திருத்தி இருக்கின்றனர். புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டு காலம் கழகத்தை சட்டவிதிபடி வழிநடத்தி வந்தார்கள்.
கழகத்தின் சட்ட விதிப்படி புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் ஏற்கனவே இருக்கும் உறுப்பினர்களாக இவர்களை புதுப்பிக்க வேண்டும். இருக்கின்ற அனைத்து கிளை கழகங்களிலும் புதிய உறுப்பினர் படிவங்கள் அளிக்கப்பட வேண்டும். அவரவர் உறுப்பினர் படிவங்களை பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் கொடுக்க வேண்டும். இதனையடுத்து கழகத்தின் விதிப்படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கப்பட வேண்டும். அதன் தொடர்ச்சியாக கழகத்தில் அமைப்பு ரீதியிலான தேர்தல் ஜனநாயக முறைப்படி வாக்களித்து நடத்தப்பட வேண்டும். இப்படி செய்யும் பட்சத்தில் கீழ் நிலையில் இருக்கும் தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை உருவாகும். அந்த நிலை தான் புரட்சித் தலைவர் காலம் தொட்டு புரட்சித்தலைவி காலம் வரை இருந்து வந்தது. ஆனால் தற்போது அதனை மாற்றியுள்ளார்கள். தற்போது இதனை மாற்றக்கூடாது எனக் கூறியிருப்பதாக ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிலும் குறிப்பாக பழைய விதிகள் தொடர்ந்தால் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.