மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்தில் வாலிபர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் பகுதியில் ஹரிஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு ஐ.டி.ஐயில் படித்து வந்துள்ளார். இவரது இறந்து விட்டதால் அவரை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் வெளியே சென்ற ஹரிஷ் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இருப்பினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சேலம்-மொரப்பூர் செல்லும் ரயில் பாதையில் ஹரிஷ் அடிப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.