இருசக்கர வாகனம்-கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் தனது மகன் விஸ்வநாதனுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது தர்மபுரியிலிருந்து வேகமாக வந்த கார் இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செந்தில் குமார் மற்றும் அவரது மகன் தூக்கி வீசப்பட்டடு படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தந்தை-மகன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில் குமாரின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.