இருசக்கர வாகனத்தின் மீது மினி வேன் மோதிய விபத்தில் ஊர்காவல் படை வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள சித்தூர் பகுதியில் தீர்த்தகிரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீர்த்தகிரி கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மினி வேன் இவரது இரு சக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தீர்த்தகிரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீர்த்தகிரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.