”ஜப்பானில் ரயில் மீது லாரி மோதி விபத்து”…. ஓட்டுநர் பரிதாப பலி… 34-க்கும் மேற்பட்டோர் காயம்.!!

ஜப்பானில் ரயில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார். 

ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் உள்ள யோகோஹாமா நகரம் அருகே, ரயில்வே கடவு பாதை அமைந்துள்ளது. இந்த பாதை வழியாக இன்று காலை 11:40 மணியளவில் பயணிகள் ரயில் ஓன்று டோக்கியோ நோக்கி செல்ல முயன்றபோது, திடீரென கடவுப்பாதை வழியாக பழங்களை ஏற்றி வந்த லாரி ஒன்று வேகமாக ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Image result for The railway line is located near Yokohama City, Tokyo, Japan.

இதில் லாரி சின்னாபின்னமானதோடு மட்டுமில்லாமல் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கரும்புகை வெளியேறியது. இந்த கோர விபத்தில் 67 வயதான லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Image result for The railway line is located near Yokohama City, Tokyo, Japan.

மேலும் 34-க்கும்  மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக  அதிகாரிகள் தெரிவித்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.