அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள கலிஸ்பெல் நகர விமான நிலையத்தில் திங்கட்கிழமை ஏற்பட்ட விமான விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிரிழப்போ, பெரும் காயமோ ஏற்படவில்லை என்று ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கலிஸ்பெல் காவல்துறைத் தலைவர் ஜோர்டான் வெனிசியோ மற்றும் அமெரிக்க ஏவியேஷன் நிர்வாகம் (FAA) தெரிவித்ததாவது:
திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில், நான்கு பேருடன் வந்த ஒரு ஒற்றை எஞ்சின் சிறிய விமானம், கலிஸ்பெல் நகர விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அந்த விமானம் ஓடுபாதையில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு விமானத்தின் மீது நேரடியாக மோதியது.
மோதலின் தாக்கத்தில் பெரிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது. தீ, அருகிலிருந்த புல்வெளிக்குப் பரவியது. எனினும், தீயணைப்புப் படையினர் அதனை விரைவில் கட்டுப்படுத்தினர் என்று வெனிசியோ தெரிவித்தார்.
சம்பவம் நடந்ததும், மோதிய சிறிய விமானத்தில் பயணம் செய்த நான்கு பயணிகளும் விமானத்திலிருந்து தங்களாகவே வெளியேற முடிந்தது. இவர்களில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் விமான நிலையத்திலேயே சிகிச்சை பெற்றதாகவும் கலிஸ்பெல் தீயணைப்புத் தலைவர் ஜே. ஹேகன் கூறினார். மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
🚨🇺🇸 BREAKING: MID-AIR DISASTER ON THE GROUND IN MONTANA
2 planes collided at Kalispell Airport, erupting into a massive fireball.
Details on casualties are still unknown, but rescue crews are flooding the scene in a major emergency response.
Source: @nicksortor pic.twitter.com/wf7CH0gslR
— Mario Nawfal (@MarioNawfal) August 11, 2025
