பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த சீரியலின் முதல் பாகத்தில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். இவர்கள் மாப்பிள்ளை என்ற சீரியலிலும் ஜோடியாக சேர்ந்து நடித்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தான் செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக செந்தில் அறிவித்தார். இந்நிலையில் செந்தில் ஸ்ரீஜா தம்பதியினருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை செந்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் செந்தில் மற்றும் ஸ்ரீஜா தம்பதியினருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
View this post on Instagram