நாமக்கல்லில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து ஏழரை சவரன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருடைய மகள் சங்கீதா பிறந்த வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் முன் பகுதியில் கோலம் போட்டு கொண்டிருந்தார்.

அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த 71/2 சவரன் தங்க தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர்.இச்சம்பவத்தால் செயின் பறித்து சென்றது மட்டுமல்லாமல், சங்கீதாவின் கழுத்தில் காயத்தையும் ஏற்படுத்தி சென்றுள்ளனர். இதையடுத்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.