தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான கற்பித்தல் முறைகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
இதற்காக 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு 5 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. அதன்படி அறிவியல் பாடம் கற்பிக்கும் 500 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் இதனால் எதிர்காலத்தில் மாணவர்கள் அறிவியல் துறை சார்ந்த தொழிலை தேர்வு செய்ய ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது