JUST NOW : கடலூர் ஆட்சியர் வீட்டில் 50 சவரன் கொள்ளை ….!!

கடலூர் ஆட்சியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் V. அன்புச்செல்வன் . இவருக்கு தஞ்சையில்  வீடு ஓன்று இருக்கின்றது. இதில் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் 50 சவரன் நகை கொள்ளை  அடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் வீட்டிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் இருக்கும் CCTV பதிவுகளை ஆய்வு செய்து வரும் காவலர்கள் கைரேகை நிபுணர்களையும் வரவைத்து சோதனை செய்து வருகின்றனர்.