40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்..? பிரபல நடிகை ஓபன் டாக்..!!!

தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியாகிய சூரியவம்சம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லாவண்யா. அதன்பிறகு ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் அங்கீகாரம் பெற்றார். அதன் பிறகு ஜோடி, திருமலை, வில்லன், பத்ரி, ரன் உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு அண்மையில் பிரசன்னா என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.

அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் 44 வயதில் நடிகையின் திருமணம் என தகவல் பரவியது. இது குறித்து லாவண்யா ஒரு பேட்டியில் கூறும்போது நடிப்பில் கவனம் செலுத்தியதால் திருமணம் அப்படியே தள்ளிக்கொண்டு போய்விட்டது. என்னுடைய குடும்பம் தான் மிகப்பெரிய பலம் என்றும் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வியை நான் எதிர்கொண்டதே இல்லை என கூறியுள்ளார்.