சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சூர்யா, பிரபு, சுப்பிரமணியன் மற்றும் உலகநாதன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.