சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த காசிராஜன் மற்றும் செல்வம் என்ற இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.