சென்னையில் வெப்ப சலனம் காரணமாக 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெயிலின் தாக்கத்தினாலும், மழை இல்லாததாலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் இல்லாமல் சென்னை மக்கள் தெரு தெருவாக அலைகின்றனர். இதனால் மக்கள் மழை எப்போது பெய்யும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
