கோட்டார் பூங்கா கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோட்டார் பூங்கா நகரை சேர்ந்தவர் சுபாஷ்போஸ். இவரது மகள் சோனியா. 20 வயதான சோனியா அங்குள்ள கல்லூரியில் 3_ ஆம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்ற சோனியா கல்லூரி வகுப்பு முடிந்து நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

சோனியா கல்லூரி முடிந்து வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இதையடுத்து சோனியா காணாமல் போனது குறித்து கோட்டார் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.