தமிழ்,தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் தமன்னா தனது 15 ஆண்டுகால சினிமா வாழ்க்கை குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.

பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு சினிமாதுறையில் கால் பதித்தவள் நான். எனது 15 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை கற்றுக்கொண்டேன். இப்போது முன்னணி நடிகையாக வலம்வருகிறேன். இந்நிலையில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளேன் அதை விமர்சிக்கிறார்கள். ஆனால் வட இந்தியாவில் பெரிய நடிகைகள் பாடலுக்கு ஆடுகிறார்கள். தென்னிந்தியாவில் மட்டும் தான் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியதும் பட வாய்ப்புகல் குறைந்துவிட்டது அதனால் தான் ஆடுகிறார்கள் என்று பேசுகின்றனர். எனக்கு நடனம் தெரியும். அதனால் நான் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடுகிறேன் என்று கூறியுள்ளார்.