மர்மமான முறையில் ஆற்றில் ஆண் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பட்டினச்சேரி பகுதியில் வெட்டாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக நாகூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆற்றில் உயிரிழந்து கிடந்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.