கிணற்றில் மூழ்கி தச்சு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் பகுதியில் தச்சுத் தொழிலாளியான கிஷோர்குமார் வசித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டி வீட்டிற்கு குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள 60 அடி ஆழ கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென கிஷோர்குமார் தண்ணீரில் மூழ்கி விட்டார். எனவே உறவினர்கள் அவரை தேடி பார்த்துள்ளனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிஷோர் குமாரை சடலமாக மீட்டனர். இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.