உடல் வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ராஜீவ் காந்தி நகரில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் வலியால் பெருமாள் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.