வரலாறு காணாத வகையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பூண்டு விலை உயர்ந்திருப்பதுதான் இல்லத்தரசிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தற்போது ஒரு கிலோ பூண்டு ₹500க்கு விற்கப்படுகிறது. இதற்கிடையே சமையலின் மிக முக்கிய உணவுப் பொருளாகக் கருதப்படும் வெங்காயத்தின் விலையும் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், குடும்ப தலைவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.