ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இன்று (மார்ச் 1ஆம்) தேதி முதல் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மக்களும் பயன்பெறும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மிக முக்கியமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது.

அதாவது ராகி, உளுந்து மற்றும் கோதுமை போன்ற பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நிலையில் ராகி மாவையும் சேர்த்து வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று (மார்ச் 1ஆம் தேதி) முதல் ராகி மாவு வழங்கப்படும் என்று அம்மாநில குடிமை பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.