உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவில் பலமுறை மர்மமான முறையில் வெடி விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது உக்ரைன் போருக்கு இடையூறு செய்வதற்காக நாசக்காரர்கள் மேற்கொண்டு வரும் சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் Angarsk என்னும் இடத்தில் அமைந்துள்ள முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

அந்த விபத்தில் எண்ணெய் ஏற்றி செல்லும் ரயில் ஒன்று தீப்பிடித்து கரும் புகையுடன் எரியும் புகைப்பட காட்சிகள் வெளியாகி உள்ளது. 4,300 சதுர அடி அளவிலான இடத்தில் பிடித்து எரிந்த நிலையில் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராட வேண்டி இருந்தது. இந்த வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.