சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். சமூக வலைதளங்களில் பேட்டியளித்து வரும் ஷர்மிகா, நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும், மாட்டுக்கறி சாப்பிட்டால் புற்றுநோய் வரும், நல்லவர்களுக்கு மட்டுமே குழந்தை பிறக்கும் உள்ளிட்ட பல கருத்துக்களை கூறி வந்தார். இந்த கருத்துக்கள் அறிவியலுக்கு முரணாக இருப்பதாக பலரும் புகார் அளித்தனர்.

இதையடுத்து, அவரது கருத்துகளுக்கு விளக்கமளிக்க இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்குநரகம் உத்தரவிட்டது. அதன்படி இன்று விசாரணைக்கு ஆஜராகி ஷர்மிகா விளக்கமளித்தார். தொடர்ந்து, ஷர்மிகா பிப்.10ல் எழுத்துப்பூர்வ விளக்கம் தர இந்திய மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.