நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் அருகே ஆதீனங்குடி அவரைமேடு தெருவில் சக்திவேல் என்பவருடைய மகன் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று பஸ்ஸில் கல்லூரிக்கு சென்றுள்ளார். பேருந்தில் அதிக அளவில் கூட்டம் இருந்ததால் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார்.

அப்போது பஸ் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது எதிர்பாராத விதமாக பிரவீன் குமார் கால் பஸ் படிக்கட்டுக்கும் சாலைக்கும் இடையே சிக்கிக் கொண்டது. இதனால் அருகில் இருந்த பயணி கூச்சல் போட்டதால் உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டு அடியில் சிக்கிய பிரவீன் குமார் கால் விரல்களின் எலும்பு நொறுங்கி அவர் படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.