பழம்பெரும் இயக்குனர் சாகர் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ஸ்டூவர்ட்புரம், அம்மாதொங்கா போன்ற படங்களை இயக்கியவர் சாகர். தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.