பெங்களூரின் பரபரப்பான சாலையில் கார் ஒன்று டேஷ் கேமராவுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் வேண்டுமென்றே அந்த காரின் முன்பு வந்து விழுந்துள்ளார்.

காரின் ஓட்டுநர் சட்டென காரை நிறுத்தியதால் அந்தப் பெண்ணுக்கு எந்த காயம் ஏற்படவில்லை. ஆனால் அவர் காரின் முன்பு விழுந்ததும் அதன்பின்பு அந்த பெண் எழுந்து நின்று காரின் மீது அடித்ததும் டேஷ் கேமராவில் பதிவாகியுள்ளது.

சிலர் இதுபோன்று வேண்டுமென்றே காரின் முன்பு விழுந்து அதன் பிறகு கார் உரிமையாளரிடம் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலர் தங்களுக்கு இதுபோன்று ஏற்பட்ட அனுபவங்களை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.