தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். சளி, இருமல், காய்ச்சல் காரணமாக கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

,இந்த சூழலில், விஜயகாந்துக்கு இன்று 3வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது செயற்கை சுவாசம் தரப்படுவதாகவும், இன்று காலை செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு இயல்பாக மூச்சு விடுவதாக அவரது உதவியாளர் தெரிவிக்கிறார். இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.