திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமாக 11 டன் திருவாபரணங்கள் இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைரம், வைடூரியம், நவரத்தினங்கள் அடங்கிய இந்த ஆபரணங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.50,000 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் 5,387 கிலோ தங்கமும், ஐஓபி வங்கியில் 1,938 கிலோ தங்கமும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அபர குபேரு ஸ்ரீவாரி பெயரில் 1.2 டன் தங்கம், 10 டன் வெள்ளி, ரூ.17,000 கோடி பணமும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.