நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு  அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற உள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களால் இன்று முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.