இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த  மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதை காரணம் காட்டி அவர்களை விடுவிக்கக்கூடாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கைதாகும் தமிழக மீனவர்களை 5 முதல் 10 வருடங்கள் சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களின் படகுகளை கொளுத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நாளை மறுநாள் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப்போகிறோம் என தெரிவித்துள்ளனர்.