தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் சிறப்பு சிகிச்சை அறைகள் படிப்படியாக தொடங்கப்படும். இந்த கட்டண படுக்கை அறைகளுக்கு ஆயிரம் ரூபாய், 3000 ரூபாய் மற்றும் 3,500 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.