தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகிய பாம்பு பிடி வீரர்களான இவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது மத்திய அரசு. பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்களான இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இருவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.