தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.  இந்நிலையில்  பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து தேர்வுத் துறை ஆலோசனை நடத்தவுள்ளது.

ஜனவரி 30ஆம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. தேர்வு நடத்தப்பட இருக்கும் தேதிகள், கேள்வித் தாள்களை பள்ளிகளுக்கு அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கின்றன.