தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் இறுதி வரை பெய்யும். சென்னை உட்பட தமிழகத்தின் உள்ள கடலோர மாவட்டங்கள் இந்த பருவமழையின் காரணமாக அதிக மழைப்பொழிவை எதிர்கொள்ளும். இதனால் பல்வேறு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் மழை காரணமாக விடுமுறை காரணமாக குறையும் வேலை நாட்களின் எண்ணிக்கையை ஈடு செய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளிகள் நாளை செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர். மழையால் பல நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் அதனை ஈடு செய்வதற்காக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நாளையும் பள்ளிகள் இயங்க இருக்கிறது. மழை விடுமுறை கிடைத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இந்த அறிவிப்பை விரைவில் வழங்க இருக்கின்றார்கள்.