தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யின் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 3A தேர்வு இன்று  ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது.  சில நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் நடத்தப்படாது எனவும் சென்னை, மதுரை, கடலூர், காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் மட்டுமே நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.விண்ணப்பதாரர்களின் தேர்வு கூட அனுமதிச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது