
மத்திய அரசு தற்போது தேர்தல் விஷயத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது தேர்தலில் தபால் ஓட்டுகளைப் பயன்படுத்துவதற்கான தகுதி வயது 80ல் இருந்து 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 80 வயது இருந்த நிலையில் தற்போது 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, தேர்தல் விதிகள்-1961 இன் 27A பிரிவு திருத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2020 பீகார் சட்டசபை தேர்தல் முதல் தற்போது வரை, 11 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மூத்த குடிமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளும் தேர்தலில் தபால் ஓட்டுகளை பயன்படுத்தலாம்.