
நெல்லை மாவட்டத்தில் உள்ள முன்னீர் பள்ளம் பகுதியில் அருணாச்சலம் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய அண்ணன் மாரிமுத்து. இவருடைய மகன் இசக்கிமுத்து (28) என்பவருக்கும் அருணாச்சலத்திற்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாச்சலம் தன்னுடைய வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இசக்கிமுத்து வந்த நிலையில் அவரிடம் தகராறு ஈடுபட்டார். பின்னர் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து ஒரு இரும்பு கம்பியால் அவரை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக அருணாச்சலத்தின் மகள் செல்வ வேணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி முன்னீர் பள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி (50), இசக்கிமுத்து ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.