நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேட்டை  அடுத்த ஆயக்காரன்புலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், துணைச் செயலாளர் நாராயணன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக வேதாரண்யம் தாலுகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அதனால் ஏக்கருக்கு ரூ.30,000 அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அப்படி நிவாரணம் வழங்கவிட்டால் ஏழாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.