பிரபல நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண ஆவணப்படம் Nayanthara beyond the fairy tale என்ற பெயரில் ரிலீஸானது. ஆவணப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இன்னொரு தரப்பினர் எல்லாம் தெரிந்த விஷயம் தான் புதிதாக எதுவும் இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலம்பரசன் பிரபுதேவாவை பிரிந்தது ஏன்? விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டது எப்படி என கூறியுள்ளனர். ஏற்கனவே தனுஷ் பற்றி குற்றச்சாட்டை கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆவணப்படத்தில் சிம்பு, பிரபு தேவா பற்றியும் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.

அவர்களது பெயரை குறிப்பிடாமல் என்னை பொறுத்தவரை ரிலேஷன்ஷிப் என்று வந்துவிட்டால் நான் 100% என்னையே ஒப்படைத்து விடுவேன். அதே மற்றவர்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பேன். ஆனால் என் முதல் காதலில் அது நடக்கவில்லை என கூறினார். சிம்பு நயன்தாராவுடன் 100 சதவீதம் உண்மையாக உறுதியாக இல்லை என்பது போல அவர் கூறியிருந்தார். பெயரை சொல்லாமல் பிரபுதேவா பற்றி கூறும்போது, என்னை சினிமாவில் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டார். என்ன செய்வது என்பது பற்றி தெரியாமல் இருந்தேன். சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தேன் என கூறியுள்ளார்.