கோவை மாவட்டம் சின்னத்தாடகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் சுதா என்பவரும் அதிமுக சார்பில் சௌந்திர வடிவு ஆகியோரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 2553 வாக்குகள் பெற்று சுதா வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் சௌந்தர வடிவு 2554 வாக்குகள் பெற்றும் 3 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து திமுக கட்சியின் வேட்பாளர் சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மறுவாக்குகள் நடத்தப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஜனவரி 24-ஆம் தேதி மறுவாக்கம் நடத்தப்பட்ட நிலையில், வாக்குகளின் முடிவுகள் ஜனவரி 26-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. மேலும் ஊராட்சி மன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பதை முறைப்படி நீதிமன்றமே அறிவிக்கும்.