மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகா டெகாஸ் மாகாணத்தின் ஜெரீஸ் நகரில் எல் வெனாடிடோ எனும் பெயரில் கேளிக்கை விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மது ஆடல், பாடல் நிகழ்ச்சி என மகிழ்ச்சியில் திளைத்திருந்த போது மர்ம நபர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் கேளிக்கை விடுதிக்குள் நுழைந்தனர். அதன் பின் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இந்த சம்பவத்தில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிகிச்சை பெற்று வரும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அஞ்சப்படுகிறது.