சென்னை மாநகராட்சியில் இன்று கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் பதவியில் இருக்கும் எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்கும் கவுன்சிலர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுவதில்லை என்று கூறினர்.

அதோடு கவுன்சிலர்களுக்கும் மாத சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் நேரடியாக கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேயர் பிரியா விரைவில் கவுன்சிலர்களுக்கு மாத சம்பளம் தொடர்பான நற்செய்தி வரும் என்று தெரிவித்துள்ளார்.